Wednesday, November 2, 2011

மீடியாக்களின் மனிதாபிமானம்

நேற்று உண்மைக் கதைகளை ஒளிபரப்பும் ஒரு தமிழ் சேனலில் ஒரு பெண்ணின் கண்ணீர்க் கதையை விவரித்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்ணும் தான் ஏமாந்த கதையை பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். ஒருவன் அந்தப் பெண்ணைக் கெடுத்து கையில் குழந்தையையும் கொடுத்து அனாதையாக்கி விட்டது பார்ப்பவர்களை உண்மையிலேயே மனம் கொதிக்க வைத்தது. பேட்டி எடுத்தவரும் வழக்கமான தன் வண்ண வண்ண உடைகளோடு கேள்விகளைப் போட்டு விஷயங்களை வாங்கிக் கொண்டிருந்தார். லட்சுமிக்கு சரியான மாற்று இவர். பல வீட்டு வண்டவாளங்கள், இவர் மூலம் தண்டவாளங்கள் ஏறி இருக்கின்றன. இந்த நிகழ்ச்சி என்றைக்கு விபரீதமாகப் போகிறதோ தெரியவில்லை. பிறகு  முக்கியமான கட்டத்தில் சீரியல் போல தொடரும் போட்டு விட்டார்கள். அதற்கு அப்புறம் நடந்ததுதான் டாப். 


இன்றைய கேள்வி.
இந்தப் பெண்ணை ஏமாற்றியவன் பெயர்
1. ராமசாமி
2.குப்புசாமி
3.மாடசாமி
சரியான விடையை எஸ்.எம்.எஸ் செய்பவருக்கு.....

இதென்ன கேம் ஷோவா! அடச்சீ தமிழ்


Sunday, August 21, 2011

அண்ணா ஹசாரே, ஞாநி, சோ

ஜெயமோகனின் அருமையான கட்டுரையைப் படித்துப் பாருங்கள். அண்ணா ஹசாரே, ஞாநி, சோ

Saturday, August 20, 2011

நேர்மைத் திறமுமின்றி

அன்னா ஹசாரேவுக்குப் பின்னால் திரண்ட வட இந்தியக் கூட்டத்தையும், கொஞ்ச நாளைக்கு முன்னால் சமச்சீர் கல்விக்கு ஆதரவாக நம் தமிழ்நாட்டுக் கூட்டத்தையும் நினைத்துப் பார்க்கிறேன். அதன் ஆவேசத்தில் கால்பங்கு கூட இங்கு இல்லையே. இங்கு போனால் போகிறதென்று கோர்ட் உத்தரவு போட்டதால் நாம் தப்பித்தோம். ஆனால் அங்கு கோர்ட்டையே உத்தரவு போட வைக்கிறார்கள். நம் மக்களுக்கு நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் கொஞ்சம் குறைந்து விட்டதாகத் தோன்றுகிறது. தனியார் பள்ளி முதலாளிகளுக்கு எதிராக எனக்குத் தெரிந்தவரை பிரின்ஸ் கஜேந்திரபாபு மற்றும் சிலரைத் தவிர தீவிரமாய் செயல்பட்டவர்கள் யாரும் கண்ணுக்குத் தெரியவில்லை. பார்க்கப் போனால் மக்களின் ஆவேசத்தை விட பள்ளி நிர்வாகிகளின் 'தர்ம' ஆவேசம் அதிகமாக இருந்தது. அப்போது நம் மக்கள் எவ்வளவு கிள்ளுக் கீரைகளாக இருந்திருக்கிறார்கள்.  சகிப்புத் தன்மை அதிகமானதால் நம் ஆயுதங்கள் மழுங்கி விட்டன. ஆனால் சகிப்பின்மை அதிகமானபோது காந்திக்கு அஹிம்சையும் ஆயுதமானது.
 நாம் ஹிந்தி கற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் சில விஷயங்கள் ஹிந்தியைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டுமோ!

Wednesday, May 18, 2011

சட்டசபையை மாற்றுவது தவறல்ல

சட்டசபையை மாற்றுவதை சில பேர் எதிர்க்கிறார்கள்.  ஆனால் அவர்கள் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். புதிதாய்க் கட்டப்பட்ட சட்டசபையில் என்னென்ன மர்மங்கள் ஒளிந்திருக்கின்றனவோ யாருக்குத் தெரியும். ஏதாவது சர்வைலன்ஸ் கேமராக்கள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கலாம். பேச்சுகள் ரகசியமாக ஒட்டுக் கேட்கப்படலாம், நிக்சனின் வாட்டர்கேட் போல. அந்தக் காலத்தில் ராஜாக்கள் சுரங்கப் பாதைகள் அமைத்திருப்பார்கள் தனக்கு மட்டுமே தெரியுமாறு. அந்த ரகசியங்கள் கட்டியவர்களுக்கே தெரியும்.அதனால் அந்த மர்மமாளிகையை தற்போது ஆளும்கட்சி சந்தேகப்படுவதில் தவறே இல்லை.

Wednesday, April 20, 2011

அபூர்வ ராகங்கள் (அ) அபூர்வ சகோதரர்கள் (அ) கலிகாலம்

இரட்டைக் குழந்தைகள் ஒரே சாயலைக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அதைப் போலவே ஒரே தந்தையைக் கூட கொண்டிருக்க வேண்டியதில்லை என்று ஒரு கேஸில் தெரிய வந்திருக்கிறது.
ஒரு பெண் வெளிநாட்டில் தன் இரட்டைக் குழந்தைகளுக்கு அப்பா இவர்தான் என்று ஒருவர் மேல் கேஸ் போட, அவரிடம் டெஸ்ட் எடுக்கப்பட்டபோது ரிசல்ட்டில் ஒரு குழந்தைக்கு மட்டுமே அவர் தந்தை என்று தெரிய வந்தது. இன்னெரு குழந்தைக்கு அவரது டிஎன்ஏ மேட்ச் ஆகவில்லை. வழக்கம் போல் டாக்டர்கள் இது ஒரு ரேர் கேஸ் (லட்சத்தில் ஒரு வாய்ப்பு) என்று கண்ணாடியைக் கழட்டியபடிசொல்லி விட்டார்கள். கருத்தரிக்கும் சமயத்தில் அடுத்தடுத்த நாட்களில் இருமுட்டைகள் fertilise ஆனால் இது போல வாய்ப்பு உண்டாம்.
இதில் டவுட் என்னவென்றால் அவர்கள் உடன்பிறந்த சகோதரர்களா (ஒரே அம்மா) அல்லது ஒன்று விட்ட சகோதரர்களா?(வேறு வேறு அப்பா)
same blood or half blood?
அப்புறம் அந்த அப்பா மற்றொரு குழந்தை மேல் அன்பு காட்டுவாரா? அல்லது அந்த அம்மா நடத்தை கெட்டவள் என்று (இதை விட என்ன சாட்சி) மொத்தமாக escape ஆகி விடுவாரா?

Monday, April 11, 2011

சுனாமியால் அழியாதவை

சுனாமிக்குப் பிறகு ஜப்பானில் லூட்டிங் எனப்படும் கொள்ளைகள் (ஆளில்லாத கடைகளில் கிடைத்ததை சுருட்டிக் கொண்டு ஓடுவது) நடைபெறவில்லை என்பதை எனது முந்தைய பதிவில் பார்த்தோம். இப்போது இன்னொரு செய்தி வெளியாகி உள்ளது.

சுனாமி ஏரியாக்களில் கண்டெடுக்கப்படும் தொலைந்து போன பொருட்களைத் திருப்பிக் கொடுக்கப்படுவது (அதுவும் போலீஸ் ஸ்டேஷனில்(!)) அதிகரித்து உள்ளது. திருப்பிக் கொடுக்கப்பட்ட பொருட்களால் குடோன்கள் நிரம்பி உள்ளது.
தொலைந்து போன பொருட்களை முக்கியமாக பணத்தை உரியவரிடம் திருப்பிச் சேர்க்கும் பணி போலீஸுக்கு அவ்வளவு சுலபமாக இல்லை(!). ஏதாவது பர்ஸ் அல்லது wallet இருந்தால் அட்ரஸ் ஓரளவுக்கு கண்டு பிடித்து விடலாம். ஆனால் வெறும் பணமாக இருந்தால் அது ரொம்ப கஷ்டமாக இருக்கிறதாம். அதையும் மீறி 10% பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டார்கள்.

அங்கு ஒரு சட்டம் உண்டு. மூன்று மாதத்துக்குள் யாரும் பணத்தை கிளெய்ம் பண்ணவில்லையென்றால், யார் கண்டு பிடித்துக் கொடுத்தாரோ அவரே திரும்ப வாங்கிக் கொள்ளலாம். அந்த திரும்ப வாங்கும் உரிமையையும் பல பேர் ரத்து செய்து விட்டார்கள்.

அதற்குப் பிறகு அந்தப் பணம் உயர் அதிகாரிகளிடம் அனுப்பப்பட இருக்கிறது. அது போக கிடைத்திருக்கும் unclaimed லாக்கர்கள் இன்னும் உடைக்கப்படவில்லை. அவைகளுக்குள் ஏகப்பட்ட நகைகள், ஷேர்கள், சொத்துப் பத்திரங்கள் இருக்கலாம் என அதிகாரிகள் ஊகிக்கிறார்கள். அவற்றை எல்லாம் என்ன செய்வது என்று இன்னும் முடிவாகவில்லை.
ஜப்பானுக்கு அன்னா ஹஸாரேக்கள் அதிகம் தேவைப்படாது போலிருக்கிறது. அது போல ஒரு சந்தேகம். அங்கு ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுத்தால் வாங்குவார்களா?

Saturday, April 2, 2011

இன்றைய கூகிள் சின்னம்

இன்றைக்கு கூகிளின் லோகோ, ஐஸ்கிரீம் சன்டே உருவான 119 வது வருட நினைவு நாள்.

119th Anniversary of the First Documented Ice Cream Sundae

இந்த sundae உண்மையிலேயே sundayதான். அந்தக் காலத்தில் ஐஸ்கிரீமில் புதுமைகளை புகுத்த எண்ணி சோடா வாட்டரில் ஐஸ்கிரீமைப் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். அப்போது பொதுவாக sundayக்களில் மட்டும் ஐஸ்கிரீம் சாப்பிடுவார்கள். ஐஸ்கிரீமே தெரியாத அளவுக்கு சோடா நுரை மூடி விடுவதால், இது ஐஸ்கிரீமே அல்ல என்று சில பழமைவாதிகள் இதற்கு சட்டபூர்வமாகவே தடை விதித்து விட்டனர்.


ஆனால் இவான்ஸ்டன் என்ற ஊரில் சட்டத்தை மதித்து சோடாவை விட்டுவிட்டு நுரையில்லாமல் வேறு சில சிரப்புகளைகளை சேர்த்து விற்க ஆரம்பிக்க , விற்பனை சூடுபிடித்தது. அதனால் இது sodaless sunday soda என அழைக்கப்பட்டது. இது மற்ற நாட்களிலும் விற்பனை தொடர்ந்ததால் சில பேர் sunday என்று எப்படி சொல்லலாம் என்று கேட்க, ஒரு எழுத்து மாற்றப்பட்டு sundae ஆகியது.


இரு நகரங்கள் இதன் பிறப்புரிமைக்கு சொந்தம் கொண்டாடினார்கள். அவை இதாகா (Ithaca) மற்றும் இரு நதிகள் (Two Rivers). இந்த சன்டே சண்டையில் வென்றது இதாகா. ஏப்ரல் 5, 1892ல் பிளேட் என்பவர் கொடுத்திருந்த பேப்பர் விளம்பரம் இதற்கு ஆதாரமாக அமைந்தது. முதன்முதலாக இவர் 'செர்ரி சன்டே' யை உருவாக்கினார். தொடர்ந்து "ஸ்ட்ராபெர்ரி சன்டே", "சாக்லேட் சன்டே" போன்றவை உருவாக்கப்பட்டு புகழ்பெற்றன.

இது வரையில் வந்தவைகளில் மிகவும் காஸ்ட்லியான சன்டே, நியூயார்க்கில் தயாரிக்கப்பட்டது. அதன் விலை 1000 அமெரிக்க டாலர்கள்.

நன்றி விக்கிபீடியா


Friday, April 1, 2011

சுனாமி புது கிளிப்பிங்

சச்சினின் சாதனை முறியடிப்பு

சச்சின் போன போட்டியில் ஐந்து முறை உயிர் தப்பினார். ஆனால் அந்த சாதனை முறியடிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

Sachin's 'five lives' record broken!





















You thought Sachin's five lives against Pakistan is a record? Think again...
Midday cartoon

Sunday, March 20, 2011

கேப்டன் விட்டுக் கொடுப்பாரா?

அதிமுக அசைந்து கொடுக்க மறுக்கிறது. வைகோவுக்கு கவுரவப் பிரச்னை. மற்ற கட்சிகளுக்கோ குறைவான சீட்டுகள். இந்நிலையில் ஒரே ஒரு காரியம் செய்யலாம். முதலிலிருந்தே இந்த சண்டையில் நிதானமாக இருக்கும் (ஆனால் அவர் குடிகாரர் என்று புகார்!) கேப்டன் தனக்கான சில சீட்களை விட்டுக் கொடுக்கலாம். அதன் மூலம் மற்றவர்கள்தான் போதையில் இருப்பவர்கள் என்று நிரூபிக்கலாம்.

சைக்காலஜி ஆஃப் வைகோ

ஆங்கிலத்தில் self fulfilling prophecy என்பார்கள். ஒரு விஷயத்தை நம்ப ஆரம்பித்து, கடைசியில் நம் செயல்கள் அதை உண்மையாக்கி விடுவது. அது போல் வைகோவிற்கு 25 சீட்கள் அதிகம் என்று ஒதுக்கினார்கள். இப்போது அவர் மீது மக்கள் சிம்பதி சேர்ந்து உண்மையிலேயே அவரை அதற்கு தகுதி ஆக்கி விட்டன. இது அவர்கள் தெரிந்து செய்தார்களோ தெரியாமல் செய்தார்களோ இந்த டீலிங் எனக்குப் பிடித்து இருக்கிறது. வைகோவுக்கு இது பிளஸ்தான். அம்மா இந்த நாடகத்தை தெரிந்து செய்திருந்தால் உண்மையிலேயே புத்திசாலி. ஏனென்றால் எப்படியும் நாளை சமாதானமாகி விடுவார்கள். அப்போது வைகோவுக்கு சிம்பதி ஓட்டுகள் அதிகம் கிடைக்கும்.

Wednesday, March 16, 2011

சுனாமியிலும் நேர்மை

நம் ஆட்கள் சுனாமியிலும் ஸ்விம்மிங் போவோம் என்று வாய்ச் சவடால் அடித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், ஜப்பானில் ஒரு விஷயம் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. இந்த மோசமான நிலையிலும் அங்கு கடைகளிலும் மற்ற இடங்களிலும் லூட்டிங் எனப்படும் கொள்ளை நடைபெறவே இல்லையாம். ஜப்பானியர்களின் இந்த நேர்மைக்கான காரணத்தை மற்ற நாடுகள் ஆராய்ந்து வருகின்றன. இதற்கும் அங்கு அராபிய நாடுகளைப் போல கடுமையான தண்டனை முறைகளும் இல்லை. இதற்கு அவர்களது கலாச்சார முறைதான் காரணம் எனக் கூறுகின்றனர். தங்கள் நாடு என்ற பெருமை, சுயமரியாதை என்பவை எல்லாம் அங்கு உண்மையிலேயே இருக்கும் போல இருக்கிறதே! இவற்றை நம் ஆட்களுக்குக் கொஞ்சம் கடன் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

Sunday, March 13, 2011

கமல் படம் காப்பியா?

சமீபத்தில் வந்த கமல் படம் ஹாலிவுட்டில் காப்பி அடிக்கப்பட்டுள்ளதா? சந்தேகம் இருந்தால் எனக்கு வந்த இந்தப் பாட்டைப் பார்க்கவும்.


Saturday, March 12, 2011

கலிவர்ஸ் டிராவல்ஸ்

சுனாமியின் கோரத் தாண்டவத்தின் பேரழிவின் புகைப்படங்களை ஒரு தொகுப்பாகப் போட்டிருக்கிறார்கள். அதன் பிரம்மாண்டத்தைப் பாருங்கள். நாம் கலிவரின் யாத்திரைகள் கதையில் கலிவராகத்தான் நம்மை உணர்ந்திருக்கிறோம். ஆனால் இயற்கை ஒரு கலிவராகவும், நாமெல்லாம் லில்லிபுட்களாகவும் இப்படங்கள் நம்மை உணர வைக்கின்றன. லிங்க் கீழே

Wednesday, March 9, 2011

சில பொருத்தமான ஜெஃப்ரி ஆர்ச்சர் டைட்டில்கள்.

ஜெஃப்ரி ஆர்ச்சர் எப்போதும் கதைக்கான தலைப்புகள் பிரமாதமாக வைப்பார். தற்போதைய சில நிகழ்ச்சிகளுக்கு ஜெஃப்ரி ஆர்ச்சரின் சில தலைப்புகள் பொருத்தமாக இருப்பது போல் தோன்றியது. உங்களுக்கு வேறு ஏதாவது தோன்றுகிறதா? ஆர்ச்சரா இல்லை டார்ச்சரா?

ராஜா- Prison diary vol 1 and 2

வீரமணி- As the crow flies

அன்புமணி- Paths of glory

ஸ்டாலின் and முக அழகிரி- First among equals

உதயநிதி and தயாநிதி அழகிரி- Sons of fortune

கனிமொழி- A prodigal daughter

கலைஞர்- False impression

ராஜினாமா நாடகம்- A twist in the tale அல்லது To cut a long story short

Honour among thieves- சொல்ல வேண்டியதில்லை.

மன்மோகன் சிங்-A quiver full of arrows

ராமதாஸ் - Cat of 9 tales

ஜெயலலிதா- The fourth estate(கொடநாடு எஸ்டேட் போல எதோ ஒரு எஸ்டேட்டா)

வைகோ- Not a penny more, not a penny less

சிபிஐ- Beyond reasonable doubt அல்லது Twelve red herrings(Red herring-திசை திருப்பல்கள்)

காங்கிரஸ் திமுக சமாதானம்- And thereby hangs a tale

ஸ்பெக்ட்ரம் உண்மையா?- Only time will tell









Friday, March 4, 2011

குடும்ப ஆட்சி

அன்பு செலுத்துபவர்கள் அல்லது விரும்புபவர்கள், மற்ற பொருட்களின் மதிப்பை குறைவாக எடை போடுகிறார்களாம். ஏனென்றால் அன்பை நேசிப்பவர்கள் அதன் மூலமே ஒருவித பாதுகாப்பு உணர்ச்சியை பெறுகிறார்களாம். அதனால் மற்ற பொருட்களை அவர்கள் அதிகம் சட்டை செய்வதில்லை. ஆனால் அன்பின் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் பொருட்களை, பணத்தை மேலும் மேலும் சேர்ப்பதன் மூலம் மட்டுமே அந்தப் பாதுகாப்பு உணர்ச்சியை ஈடு கட்டுகிறார்களாம்.

இதனை ஆராய்ச்சியின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்கள். ஒரே பொருளை இரு பிரிவினரிடமும் கொடுத்து அவர்களை மதிப்பிடச் சொன்னபோது இது விளங்கியது. அதனால்தான் குடும்ப உறுப்பினர்களு்க்கிடையே கூட பாகப் பிரிவினையின்போது அவ்வளவு சண்டை வருகிறதாம். குப்பையான பொருள்களுக்குக் கூட அடித்துக் கொல்(ள்)கிறார்கள். எவ்வளவு கிடைத்தாலும் திருப்தியில்லை. ஆகவே இது ஒரு மனோதத்துவப் பிரச்னை என்பதைப் புரிந்து கொண்டு நம்மைத் திருத்திக் கொள்வோம். அதனால் இனிமேல் குடும்பத்தில் அன்பு ஆட்சி செய்யட்டும். அன்பின் அலைவரிசை(ஸ்பெக்ட்ரம்) பல லட்சம் கோடி மதிப்புடையது. முழுக் கட்டுரை கீழே. நான் ஆதாரமில்லாமல் பேசவில்லை.
The More Secure You Feel, the Less You Value Your Stuff

ScienceDaily (Mar. 3, 2011) — People who feel more secure in receiving love and acceptance from others place less monetary value on their possessions, according to new research from the University of New Hampshire.

The research was conducted by Edward Lemay, assistant professor of psychology at UNH, and colleagues at Yale University. The research is published in the Journal of Experimental Social Psychology.

Lemay and his colleagues found that people who had heightened feelings of interpersonal security -- a sense of being loved and accepted by others -- placed a lower monetary value on their possession than people who did not.

In their experiments, the researchers measured how much people valued specific items, such as a blanket and a pen. In some instances, people who did not feel secure placed a value on an item that was five times greater than the value placed on the same item by more secure people.

"People value possessions, in part, because they afford a sense of protection, insurance, and comfort," Lemay says. "But what we found was that if people already have a feeling of being loved and accepted by others, which also can provide a sense of protection, insurance, and comfort, those possessions decrease in value."

The researchers theorize that the study results could be used to help people with hoarding disorders.

"These findings seem particularly relevant to understanding why people may hang onto goods that are no longer useful. They also may be relevant to understanding why family members often fight over items from estates that they feel are rightfully theirs and to which they are already attached. Inherited items may be especially valued because the associated death threatens a person's sense of personal security," Lemay says.

The research was conducted by Lemay; Margaret Clark, Aaron Greenberg, Emily Hill, and David Roosth, all from Yale University; and Elizabeth Clark-Polner, from Université de Genève, Switzerland.

Email or share this story:



Wednesday, March 2, 2011

சூப்பர் விளம்பரங்கள்

life is too short for the wrong job என்ற வாசகங்களோடு ஜெர்மனியில் ஒரு விளம்பர நிறுவனம் ரசிக்கத்தக்க சில விளம்பரங்களைக் கொடுத்திருக்கிறது. உண்மையில் இந்த மாதிரி வேலைகள் கிடைத்தால் நம் life will become short to live.
நமக்குப் பின்னூட்டம் வருமோ இல்லையோ என்ற அவநம்பிக்கையில் அந்தப் பின்னூட்டங்களையும் சேர்த்துப் போட்டு விட்டேன். இதுதான் பாஸிட்டிவ் திங்க்கிங். (நமது சினிமாக்களில் கைதட்டல் சவுண்டை ரீரிகார்டிங்கில் போட்டு விடுவதைப் போல)




They're even borderline creepy! It's as though you just expect them to start moving!

What are your thoughts? What are some of your favorite or most memorable ad campaigns?
48 SWEET SOMETHINGS:
Jennifer said...

They look so real! Some very imaginive places to put advertising instead of the run of the mill billboards and bus shelters.

Tsuki aka LittleGrayFox said...

wow those are pretty incredible! I've never seen them before! I especially love the gas pump guy.

It's so fitting as I've just been thinking to myself how I really don't like my day job, however it's what pays the bills (really well). I'm in that limbo land point of either I deal with it and pay the bills, or the bills suffer and I try to make a living doing something I love

it's tough. for sure.

Pink Hibiscus said...

These pictures are pretty damn awesome. I'll never look at vending machines the same way again haha!

There was this massive ad campaign here a few years ago for a crisp brand, Taytos, featuring the inimitable Mr. Tayto. Around the time of the elections here, there were hundreds of Mr. Tayto election posters put up around the country with all the proper candidates. Juvunile, yes. Memorable, yes. Did I buy more Taytos? Hell yes.

Little Tree Vintage said...

this is so awesome, thanks for sharing! those pictures are so freakY!

NikkNaks said...

Amazing! Thanks for sharing with us!

Rachel said...

LOL, those are amazing! I never see cool ad campaigns like that! :D

Kaitlin said...

Haha, that's brilliant. I love seeing innovative, entertaining ad design. Very clever!

Lemondrop Marie said...

Those are great- and make me feel slightly better about work.

Marie @ Lemondrop ViNtAge
Super cute necklace giveaway!

kinsey french. said...

haha! I love this. When I first saw these on Tumblr I totally thought they were real. I am so serious. Leave it to me. ha! ♥ xo.

Amber said...

These are great! :)

Alycia (thecuriouspug.com) said...

those are pretty cool! i love the concept. it's like, well yea that makes sense. why didn't i think of that? hehe

renee kristine said...

oooh, i love this! can you imagine... and i thought i'd worked some shit jobs in my day!

Angel said...

wow. these are sooo cool!

Samantha said...

Such an amazing idea! I love it, and really you do expect them to start banging to let them out at any minute.

Tasha said...

Wow those are fantastic, extremely creative!

Caroline said...

Ohh I love these! So original, thanks for sharing :)

Suzan said...

Brilliant!

April, Everyday Forgotten said...

Wow! I love these, theyre so creative and actually quite scary if you were at one of the machines! Thanks for sharing this!

Bilitis said...

Wow they're all pretty impressive!

Here's one of my favourite ad campaign we had in Belgium a few years ago. It was for Eurostar trains.

http://www.mm.be/fr/cotw.php?id=608&page=28

Ms. Megan said...

That is super amazing!! Some people are just so creative!!!
xo

Moe said...

This is so funny..and kinda creepy!

Marissa {Petal and Ink} said...

Whoa! That's pretty incredible. I do agree that they're a bit creepy, though!

Ninotchka said...

Amazing! Thanks for posting.

cb said...

these are sooo amazing! i love them...so brilliant and so effective! clever germans!

xo,
cb

LO' said...

These pictures are awesome !

Chrissy said...

These are amazing - never seen them before! Thanks so much for sharing! xxx

Kate said...

This is just utterly brilliant!!

SP said...

Wow these are so awesome. Very creative. I love how they are able to clearly convey their message without criticizing/mocking anyone's real occupation.

Whimsical Wolf said...

Everyone is posting these on tumblr at the moment :D I find it great to see some original and unique advertising for once! xxx

jessie said...

that is funny. ive never seen it (soo i am wondering that it's in german. haha)

xoxo jessie

whatkatiefound said...

I really love these! wish I'd have thought of it!!

Morgan said...

Woah! Those are so cool!

Christopher Bell said...

just saw this its amazing! thanks for the post.

Christopher Bell said...

My girlfriend reads your blog and I just saw this.. one of the best ad campaigns i have ever seen. genius! thanks for the awesome post.

Joey @ Big Teeth and Clouds said...

I thought they were a bit creepy too! Very cool though.

MAI said...

This campaign is the RIGHT job !
Thanks for the awesome post !

Amanda said...

I'm a total sap and the Disney ads with parents becoming children alongside their kids slays me. Target. Market.

putrichairina said...

LOL. Brilliant!

elle woodward said...

oh wow that is hilarious! it took me a minute to realize it wasn't a real person in there haha. So creative and I love it. Two thumbs up from me!

Lileigh said...

GENIUS!

MashMelon said...

One of the innovative way of campaigning. Like it!

Cheray said...

Ahhh so creepy!!
I've never seen these before but I absolutely love them! I can't even choose a favourite - they're all brilliant
Thanks for sharing them
x

Anonymous said...

I didn't get creepy, but a bit disturbing for sure...

the mrs said...

This is brilliant. Such a clever campaign.

pth said...

Some old TV ads from Aus

http://www.youtube.com/watch?v=0UdG6Lvjd0Q

http://www.youtube.com/watch?v=m_iE3_yMdgY

Enjoy!

hope said...

I love them, so ingenious...and from one who is looking, made me smile...
Much needed

Nena Nadine said...

That photo series is amazing. Thanks for sharing.

Liviu said...

Great ads!
Ha, I've always suspected that in some of those machines there were people doing hard work :) I'm kidding, of course, but it goes with the tone of the ads, you know.

அமெரிக்காவிலும் அரசு ஊழியர்கள் ஸ்ட்ரைக்!

இங்கு மட்டுமல்ல அமெரிக்காவிலும் அரசு ஊழியர்கள் அடிக்கும் லூட்டி தாங்க முடியவில்லை. எல்லா வகை சலுகைகளையும், வாழ்க்கை உத்தரவாதங்களையும் அனுபவித்துக் கொண்டும் அடிக்கடி ஸ்ட்ரைக் செய்து வரும் இவர்கள்,
இவர்களில் பாதி சம்பளத்துக்கும் குறைவாகவும், எந்தவிதமான உத்தரவாதங்களும் இல்லாமல் வாழ்ந்து வரும் மற்றவர்களைப் பற்றி என்றைக்காவது சிந்தித்தது உண்டா?
அங்கு பிரைவேட் செக்டரில் வேலை செய்து வரும் ஒருவர் வேதனையுடன் எழுதிய சிந்தனையைத் தூண்டும் ஒரு கட்டுரையையும், அதற்கு வந்துள்ள எண்ணற்ற பின்னூட்டங்களையும் படித்துப் பாருங்கள். ஒரு தெளிவு கிடைக்கும்.

Tuesday, February 22, 2011

வேதனை அளிக்கும் எட்டாவது அதிசயம்

உலக புராதான கழகம் எட்டாவது அதிசயமாக எதை அறிவித்து இருக்கிறது தெரியுமா?
மனிதன் இதுவரை உருவாக்கியவைகளிலேயே மிகவும் தாக்குப் பிடிப்பது மட்டும் அல்லாமல் வேகமாக வளர்ந்து வரக் கூடியதும், அதே சமயத்தில் நாம் பெருமைப்பட முடியாததுமாக இது இருந்து வருகிறது.

மற்ற ஏழு அதிசயங்களும் இதன் கம்பீரத்துக்கு முன்னால் கை கட்டி நிற்க வேண்டியதுதான்.

பல தலைமுறைகளாக இதன் கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சியை நாம் வியப்போடும் வேதனையோடும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

பல ஜாம்பவான்கள் இதை அழிப்பதற்காக படை எடுத்து தோற்றுப் போயிருக்கிறார்கள்.

இதைத் தொடங்கி வைத்தவர்கள் யூதர்கள் என்று சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு தலைமுறையிலும் இது வளர்ந்து கொண்டே வருவது ஆச்சரியம் அளிப்பதாக இருக்கிறது.

இந்தத் தலைமுறையில் இதன் வலிமை பல மடங்கு அதிகமாக இருக்கிறது. ஆனால் இம்முறை பல்லாயிரக் கணக்கான மக்களின் துணையுடன்(அழிவுடன்) இது வீழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் வளர்ச்சியை கீழ்க்கண்ட வரைபடத்தில் பாருங்கள்.


அந்த எட்டாவது அதிசயம் பணக்காரனுக்கும் ஏழைக்கும் உள்ள இடைவெளிதான்.




Tuesday, February 15, 2011

Tropa De Elite 2(Elite Squad)

சிட்டி ஆஃப் காட் இயக்குனரின் அடுத்த படைப்பு Elite Squad1. இதுவே நல்ல படம். இதற்கு அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை ரிலீஸ் செய்திருக்கிறார். இது அதை விட சூப்பர் ஹிட்.
முதல் படத்தில், போதைப் பொருள்கள் கடத்துபவர்களைப் பற்றி விரிவாகச் சொன்னவர் இந்தப் படத்தில் அதிகார வர்க்கம் மற்றும் போலீஸின் கூட்டமைப்பில் பிரேசிலில் நடக்கும் ஊழல்களை அம்பலப் படுத்தியுள்ளார்.
இந்த இரண்டாம் பாகம் நமக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் நம் ஊரில் நடப்பது போலவே இருக்கிறது. அதுவும் எலெக்ஷன் வரும் இந்த சமயத்தில் எல்லோரும் பார்க்க வேண்டிய படம்.
ஆயுதங்களைத் திருடியதாக வீண் பழியை சேரி மக்கள் மீது போட்டு விட்டு, அந்த சாக்கில் தேர்தலில் தில்லுமுல்லு செய்ய போலீஸ் படையை உள்ளே அனுப்புவது முதல் சட்டசபையில் கூலாக உட்கார்ந்து இருப்பது வரை எல்லா ஊர்களிலும் அரசியல்வாதிகள் ஒன்றுதான்.
முதல் படத்தில் வரும் கேரக்டர்களே இதிலும் வருவதால் அதைப் பார்த்து விட்டு இதைப் பார்த்தால் இன்னும் நன்றாக இருக்கும். படம் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை. இரண்டு படமுமே imdbயில் 8க்கு மேலேதான். இரண்டுமே record break collection.

Saturday, February 12, 2011

பிளாக்குகள் தடையா?

எந்த பிளாக்குகளும் ஓபன் ஆக மாட்டேன் என்கிறது தமிழ்மணத்தில். என்ன பிராப்ளம் என்று தெரியவில்லை. அல்லது என் கம்ப்யூட்டரில் ஏதாவது செட்டிங்க்ஸ் தகராறா? யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

Monday, February 7, 2011

அமெரிக்காவிலேயே இப்படியா!

பெனிசில்வேனியாவில், மதநம்பிக்கை காரணமாக குழந்தையை டாக்டரிடம் காட்டாமல் கொன்ற ஒரு தம்பதிக்கு கோர்ட் தண்டனை வழங்கி உள்ளது. அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் 12 குழந்தைகள் பெற்றோரின் மத நம்பிக்கை காரணமாக டாக்டரிடம் காட்டாததால் இறக்கின்றனர். மத சுதந்திரம் என்ற பெயரால் நடைபெறும் இந்த முட்டாள்தனத்துக்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமென்று எல்லோரும் விரும்புகின்றனர். மேலும் படிக்க http://www.good.is/post/should-families-that-believe-in-faith-healing-be-prosecuted-when-their-children-die/

Friday, February 4, 2011

2G

. ஆனந்த விகடனில் வந்த அருமையான கட்டுரை. முடிந்த அளவுக்கு மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்
Sivakumar.M

மக்கள் அனைவரையும் இலவசங்களை மட்டுமே வாங்க தெரிந்த மாக்கான்கள் என்றே நினைத்து விட்டார். அதற்காகத்தான் தமிழ்நாட்டில் அனைவரும் குழந்தை பெற்றுகொள்கிறார்கள் என்று சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை. என்னது ஏழைகள் பயன்படுத்தும் அளவிற்கு குறைந்த விலையில் சேவையை கொண்டுவந்தது ராசாவா? மக்களே உண்மையை புரிந்து கொள்ளுங்கள். இந்த புளுகு மூட்டைகளின் பாவத்திற்கு ஆளாகாதீர்கள். விலை குறைந்ததிற்கான காரணத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.

1999 ஆண்டில் தான் தொலைதொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது. அன்று வெறும் பணம் படைத்தவர்கள் மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே நுகர்வோரின் எண்ணிக்கை மிக குறைவு. சில பல லட்சங்கள் மட்டுமே. தொழில் நுட்பவளமான 1G அல்லது 2G அலைக்கற்றைகள் மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளது. ஆனால் உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லை. விலை கொடுத்து உரிமம் வாங்கியவர்கள் லாபம் பெற நுகர்வோரிடம் நிமிடத்திற்கு அதிக கட்டணம்(In coming and out going ) வசூல் செய்ய கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் நாம் தான் வாதி படைத்தவர்களாச்சே என்று இஷ்டத்திற்கு பேசி நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள் விரையம் செய்யவில்லை. குறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர்.

நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம் பெற அதிக நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரி செய்ய அன்றைய அரசு ஒரு தொலை தொடர்பு புரட்சியை உருவாக்க முயன்றது. விளைவு நாளுக்கு நாள் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகமானது. இன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. 2010 நுகர்வோரின் எண்ணிக்கை சுமார் 60 கோடிக்கும் மேல். 2008 இல் 50 கோடிக்கும் மேல். இதற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதிய அலைகற்றைகள் அரசிடம் இன்றும் உள்ளனர். ஆனால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 60 கோடிதான். 122 தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க பட்டுள்ளது. தகுதி என்றால் என்ன? போதிய அனுபவம், வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி டெபொசிட் அது மட்டும் இல்லை வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை தொடங்க வேண்டும். இந்த குறிப்பை நினைவில் வைத்து கொள்ளுங்கள். பின்னால் உதவும். டாட்டா, ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் உரிமம் வாங்கியுள்ளனர். இதோடு அந்த 122 தகுதி இல்லாத நிறுவனங்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.

நியாய கணக்கு:

இந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல் உள்ளது. எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு நபர் தனது கைபேசியை ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் 15 நிமிடங்கள் (LOCAL CALLS ONLY) பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். ஒரு நிமிடத்திற்கு 40 பைசா கட்டணம். அப்போ 15x0.40 =6.0 ரூபாய் ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது. 60 கோடி கைபேசிகள். 60x6.0 = 360 கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது. ஒரு மாதத்திற்கு 30x360 = 10,800 கோடிகள். ஒரு வருடத்திற்கு 12x10,800 = 1,29,600 கோடிகள். 2008 இல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போ குறைந்தபட்ச வருமானம் இன்றுவரை 2,59,200 கோடிகள். இது ஒரு நாளைக்கு வெறும் 15 நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு கிடைத்திருக்கும் வருமானம். இதோடு SMS, MMS, STD, ISD, சேவை கட்டணம், இணைப்பு கட்டணம்.......இன்னும் என்ன என்னவோ கட்டணங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் மற்றும் 15 நிமிடத்திற்கு அதிகமாக பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். என்னால் கணக்கிடவே முடியவில்லை. என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி காண்பிப்பது "INFINITIVE". நான் தற்போது இந்தியாவில் இல்லை. இருந்திருந்தால் அனைத்தையும் அலசி ஆராய்ந்து இதைவிட இன்னும் துல்லியமாக நடந்த ஊழலின் அளவை குறிப்பிட்டு இருப்பேன். இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது மக்களை சென்று அடைந்து இருக்கவேண்டும். கிடைத்ததா? மக்களை சென்றடைந்ததா? நிச்சயம் இல்லை என்றுதான் ஒவ்வொரு மக்களும் கூறவேண்டும். அப்படி என்றால் இந்த மக்கள் பணம் சட்டத்திற்கு புறம்பாக யாரிடமோ சென்று அடைந்துள்ளது. இந்த ஊழல் பணம் அடுத்த சில ஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே தாக்கப்போகிறது. விலைவாசி உயரும். பொருளாதாரம் நாசாகும். "Above middle Class" மக்கள் நடுத்தர மக்களாகவும், நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழை மக்கள் மேலும் பரம ஏழைகளாகவும் மாறுவார்கள். ஜனநாயகம் வேரோடு அழியும். மனிதாபிமானம், மனிதநேயம் மண்ணோடு மண்ணாகும். ரௌடிசம்,குற்றசம்பவங்கள் தலைவிரித்து ஆடும். கடந்த ஐந்தாண்டுகளாக ஆயுள் கைதியாக உள்ள நடுநிலை பத்திரிகைகள் இனி மரண தண்டனை கைதிகளாக மாற்றப்பட்டு தூக்கில் போடப்படும்.

துரோகம்-1: உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் 13000 கோடிக்கும் அதிகம் பொறுமானம் உள்ள(உதாரணம் S .TEL நிறுவனம்13000 கோடிக்கு வாங்க முன்வந்தது) அலைகற்றைகள் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200 , 1300 ,1650 கோடிகளுக்கு திட்டமிட்டு விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு சேரவேண்டிய, மக்களுக்கு சேர வேண்டிய வருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது.

துரோகம்-2: பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால் அரசுக்கு அதாவது பல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில சுய நல தனி மனிதர்களை சென்று அடைந்துள்ளது.

துரோகம்-3: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் "swan, Unitech" போன்ற லெட்டர் பேட் நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லை என்று உள்ளூர ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய நிறுவனங்கள் போட்டி இல்லாமல் தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க அதாவது கட்டணம் என்ற பெயரில் மக்களின் உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத பினாமி லெட்டர் பேட் நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இவைகள் சேவையை தொடங்கி இருந்தால் சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும் கட்டணம் இப்போது இருப்பதை விட மேலும் குறைந்திருக்கும். ஒரு வேளை இதற்காகத்தான் திட்டமிட்டு "S.TEL போன்ற போட்டி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவில்லை என்ற சந்தேகம் தெளிவாக எழுகிறது.

துரோகம்-4: MTNL BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில் அலைகற்றைகளை ஒதுக்கி போதிய ஆப்பெரடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில் பேசும் கட்டணம் நிமிடத்திற்கு வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும். மக்கள் அரசினால் பயன் அடைந்து இருப்பார்கள்.
துரோகம்-5: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய லெட்டர் பேட் நிறுவனங்கள் தனது பங்குகளை பல வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். அதில் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் அடங்கும். இந்தியாவின் தொலை தொடர்பு துறையை இந்த நாடுகளும் பயன்படுத்துகின்றனர். இது உள்நட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தல்.

துரோகம்-6: நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள், CAG ,தொலைதொடர்பு சம்பந்தபட்ட, கைபற்றபட்ட ஆவணங்கள், சம்பந்தபட்ட பிரதமர் அலுவலக கடிதங்கள் புறகணிப்பு, சட்ட,நிதி துறை கடிதங்கள் புறகணிப்பு, TRAI பரிதுரைகள் புறகணிப்பு இப்படி கோடி கணக்கில் ஆதாரங்கள், சாட்சிகள். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று முந்தைய ஆட்சியாளர்கள் வகுத்த அடிப்படை கொள்கை கூட பின்பற்றப்படவில்லை. அதிலும் முறைகேடு.

துரோகம்-7: இவ்வளவு குற்றங்கள் செய்தும் சம்பந்தபட்ட குற்றவாளிகள் செய்த தவறை ஒப்பு கொள்ளாமல் நாங்கள் தவறு செய்யவில்லை என்று மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்வது மக்களுக்கு இழைக்கப்பட்ட ஏழாவது துரோகம். இதன் உச்சகட்டம்தான் 2G யில் ஊழலும் இல்லை நஷ்டமும் இல்லை என்று மத்திய அமைச்சரின் பத்திரிகை பேட்டி. இந்த உலகத்திலே தான் மட்டும்தான் புத்திசாலி வக்கீல் மற்ற அனைவரும் அடி முட்டாள்கள் என்ற ஆணவ நினைப்பு.
துரோகம்-8: நடந்த அனைத்து தேச துரோகங்களும், குற்றங்களும் பொருளாதார மேதை பிரதமருக்கு தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளது. இருந்தும் பிரதமர் வாய் மூடி மௌனியாக இருப்பது மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம்.

துரோகம்-9: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடாக பெறபட்ட பணங்கள் பெரும்பாலானவை இந்தியாவில் புழக்கத்தில் இல்லாமல் அந்நிய நாடுகளில்,வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல். இந்த பணம் அரசுக்கு வருவாயாக கிடைத்து இருந்தால் ஏராளமான அரசு கல்லூரிகள், பள்ளிகள், பாலங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் என்று உருவாக்கி அனைவருக்கும் கல்வி,வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் என்று ஏற்படுத்தி ஏழைகளே இல்லாத நாட்டை உருவாக்கி இருக்கலாம். இலவசங்கள் பெறாத மக்களை கண்டிருக்கலாம்.

துரோகம்-10: ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பயன்படுத்தி தலித் பற்றும் பிற இனத்தை சேர்ந்த ஏழை விவசாய மக்களிடம் மிரட்டி விளை நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டதாக தகவல். இது மக்களுக்கு இழைக்கபட்ட துரோகம் பத்து. ஒரு முறைகேட்டை செய்து அதையே மூலதனமாக வைத்து இன்னொரு முறைகேடு செய்யப்பட்டுள்ளது. ஊழல் செய்வதினால் மக்களுக்கு இழைக்கபடும் துன்பங்களுக்கு இதை விட சிறந்த உதாரணம் வேறென்ன வேண்டும். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இதுதான் ஊழலின் விளைவுகள். இவர்கள் ரத்தம் குடிக்கும் கொசுக்கள் மாதிரி. நம்மிடம் உள்ள ரத்தத்தை உறிஞ்சுவதோடு மட்டும் இல்லை அதோடு சேர்த்து நோய் கிருமிகளையும் நமது ரத்தத்தில் விட்டு செல்கின்றனர்.

இப்படி 2G ஊழலில் மக்களுக்கு இழைக்கபட்ட துரோகங்கள் எண்ணில் அடங்காதது. இந்த ஊழலின் தாக்கம் இதோடு நிற்காது. மக்களைத்தான் சுத்தி சுத்தி அடிக்கும். எப்படி? ஊழல் பணத்தை வைத்து ஏழைகளின் நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு அதை பிளாட் போட்டு அதே மக்களிடம் அதிக விலை வைத்து விற்கப்படுகிறது. ஒரு ஏக்கரை குறைந்த விலைக்கு விற்ற மக்கள் அந்த பணத்தை வைத்து அதே இடத்தில் அதாவது முந்தைய சொந்த இடத்தில ஒரு கிரௌண்ட் நிலம் கூட வாங்க முடியவில்லை. இதுதான் ஊழலின் விளைவு. இப்போது புரிந்து இருக்கும் ஏழைகள் எப்படி உருவாகிறார்கள் என்று. இது மட்டும் இல்லை ஊழல் பணத்தை வைத்து அனைத்து இடங்களையும் வளைத்து போட்டு ரியல் எஸ்டேட் நடத்தும் அனைத்து அரசியல்வாதிகளும் இப்படி ஊழல் பணத்தில்தான் செய்கின்றனர். அவர்கள் சொல்வதுதான் விலை. விலைவாசி உயர்வது இயற்கை அல்ல. அனைத்தும் மிக மிக செயற்கையே. இயற்கை என்று ஆளும் கட்சியினர் கூறுவது தவறு. உண்மையை மூடி மறைக்கும் செயல். இது ரியல் எஸ்டேட் மட்டும் இல்லை. அனைத்து பொருள்களுக்கும் பொருந்தும். குறைந்த விகிதத்தில் உள்ள பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். அதிக விகித்தில் உள்ள நடுத்தர மக்கள், ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆவார்கள். இந்த ஏழை, பணக்காரன் இடை வெளியை குறைக்கத்தான் அரசாங்கம் ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இன்று ஆளும் வர்க்கத்தினரே அதற்கு முழு முதல் காரணமாக திகழ்கிறார்கள். சொல்லபோனால் அரசின் கடமைகளை அரசியல்வாதிகளும் மறந்துவிட்டனர். இவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களும் தங்கள் கடமைகளை மறந்து இலவசத்துக்கு பின் செல்கின்றனர். இலவசம் வாங்கும் மக்களே ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் உழைப்பு என்னும் மூலதனத்தை மறந்து இலவசம் வாங்குவதால் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் நீங்கள் ஏழைகளாகத்தான் இருக்க முடியும். உங்கள் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இலசவசம் கொடுக்க தேவையான வரிபணத்தை செலுத்தும் உழைக்கும் மக்களின் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இது நிச்சயம். மாற்றம் ஒன்றே மாறாதது. இலவசம் மாறவில்லை என்றால் உங்கள் வாழ்கை தரமும் மாறபோவதில்லை.

எனது நோக்கமே இந்த 2G உலக மகா ஊழலால் மக்கள் எவ்வாறு வஞ்சிக்கபட்டார்கள் என்பதை ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்கள் உள்பட அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான். எனவே தெரிந்துகொள்ளுங்கள், புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் தெரியபடுத்துங்கள். ரோட்டில் இறங்கிதான் போராடவேண்டும் என்று இல்லை.கொடி பிடிக்க அவசியமும் இல்லை. e -mail, FAX , Facebook , orkut என்று எவ்வளவோ தொழில் நுட்ப வசதி உள்ளது. தங்களுக்கு உகந்த ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தங்களின் அன்றாட வேலைகள் பாதிக்காத வகையில் சுலபமாக இதை செய்யமுடியும். செய்வீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி.

சிவகுமார்.M
சீனியர் எஞ்சினியர்