Wednesday, July 8, 2015

ஸ்கூல் வாசல் முன் பஸ்

அசோக்நகர் அரசினர் மகளிர் பள்ளியின் வாசலுக்கு முன் நான்கு நாட்களாக
ஒரு பஸ்ஸை நிறுத்தி விட்டு சென்று விட்டனர். ஸ்கூல் விட்டதும் பெண்பிள்ளைகள் வெளி வர முடியாமல் அவஸ்தைப் படுகின்றனர். போலீஸுக்குப் போன் செய்தும், பள்ளியின் உள்ளே கம்ப்ளெயிண்ட் செய்தும்
பிரயோஜனமில்லை. இந்த லட்சணத்தில் பஸ் நிறுத்தத்தில் நிறுத்த வேண்டிய எந்த பஸ்ஸூம் நிறுத்துவதில்லை. சிறு குழந்தைகள் ஓடிச் சென்று ஏமாறுகின்றனர். பார்க்க பரிதாபமாக இருக்கிறது. ஏண்டா அரசினர் பள்ளியில் சேர்த்தோம் என்று பெற்றோர்கள் வேதனைப்படுகிறார்கள்.