Wednesday, March 16, 2011

சுனாமியிலும் நேர்மை

நம் ஆட்கள் சுனாமியிலும் ஸ்விம்மிங் போவோம் என்று வாய்ச் சவடால் அடித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், ஜப்பானில் ஒரு விஷயம் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. இந்த மோசமான நிலையிலும் அங்கு கடைகளிலும் மற்ற இடங்களிலும் லூட்டிங் எனப்படும் கொள்ளை நடைபெறவே இல்லையாம். ஜப்பானியர்களின் இந்த நேர்மைக்கான காரணத்தை மற்ற நாடுகள் ஆராய்ந்து வருகின்றன. இதற்கும் அங்கு அராபிய நாடுகளைப் போல கடுமையான தண்டனை முறைகளும் இல்லை. இதற்கு அவர்களது கலாச்சார முறைதான் காரணம் எனக் கூறுகின்றனர். தங்கள் நாடு என்ற பெருமை, சுயமரியாதை என்பவை எல்லாம் அங்கு உண்மையிலேயே இருக்கும் போல இருக்கிறதே! இவற்றை நம் ஆட்களுக்குக் கொஞ்சம் கடன் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment